Monday, 13 April 2026

மஹாகவி ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதர் ஜெயந்தி Mahakavi Sri Nilakanta Dikshithar Jayanthi

*ஸ்ரீ குருப்யோ நமஹ* *மகாகவி ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதர் அவர்களுடைய 432வது ஜெயந்தி வைபவம்* *வருகிற வைகாசி மாதம் 17ம் தேதி (31-05-26) ஞாயிற்றுக்கிழமை அன்று பௌர்ணமி திதி மகாகவி ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதர் அவர்களுடைய 432வது ஜெயந்தி விழா* எப்பொழுதும் போல் பாலாமடையில் நடக்க இருக்கிறது. எல்லோரும் படிக்க எதுவாக அழைப்பிதழை இணைத்- திருக்கிறோம்.( தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ). இந்த வைபவத்தில் எல்லோரும் பெரும் திரளாக வந்திருந்து மகாகவியும் சித்தருமான திக்ஷிதரின் அருளை பெருமாறு கேட்டுக்கொள்கிரோம். *முழு நிலவின் கதிர்வீச்சால், தீக்ஷிதரின் சக்தி மிகுந்து அதிஷ்டானத்தில் விளங்கும்* இவருடைய ஜெயந்தி (பிறந்தநாள்) பௌர்ணமி தினத்தில் வருவதால் இதில் கலந்துகொள்பவர்க்கு கிட்டும் நன்மைகள்: ஆழ்ந்த மன அமைதி, ஆன்மீக ஆற்றல், முதிர்ச்சியான சித்தம், படைப்பாற்றல், உள்ளுணர்வு மற்றும் பிறரை ஈர்க்கும் காந்த சக்தி அதிகமாகும் என்று என் ஜோசிய நண்பர் கூறினார். முழு நிலவின் கதிர்வீச்சால், தீக்ஷிதரின் சக்தி மிகுந்து அதிஷ்டானத்தில் விளங்கும் என்று என் ஜோசிய நண்பர் கூறினார். நல்ல உயர்ந்த வேலையில் உள்ளவர் தலைமைத்துவ பண்புடனும் திகழ்வார்கள் என்றும் கூறினார். *ஒவ்வொரு பௌர்ணமியுமே சித்தர்கள் அதிஷ்டானத்தில் நல் அதிர்வு மிகுந்திருக்குமாம்*. அவருடைய ஜாதகம் கடினமான ஆராய்ச்சி செய்து நமது டிரஸ்டி டாக்டர் ஸ்ரீ பி எஸ் நடராஜன் அவர்கள் வெளியிட்டார் அதுவும் இணைத்துள்ளேன். அப்பையா பாலாமடை