Sunday 23 June 2019

PALAMADAI ADIPOORAM FESTIVAL INVITATION


ஸ்ரீ மங்கள நாயகி சஹாயம்
மங்கலம் தரும் ஆடிப்பூரம்
அருள்மிகு மங்களேஸ்வரி ஸமேத மங்களாங்குரேஸ்வரர் திருக்கோயில், பாலாமடை (எ) ஸ்ரீ நீலகண்ட சமுத்திரம்
ஆடிப்பூரம் அனைத்து கோயில்களிலும் கொண்டாடப்படும் ஒரு முக்கிய பண்டிகை. அன்று பூமியில் வாழும் அனைத்து ஊயிர்களையும் காக்க தேவி சக்தியானவள் பூமிக்கு வருவதாக சொல்லப்படுகிறது. “ஆடிப்பட்டம் தேடி விதை” என்பது பழமொழி. பயிர்கள் செழித்து வளர விதை விதைக்க இந்த பருவம் ஒரு சிறந்த பருவம். மக்கட்பேறு இல்லாதவர்கள் அன்னையை இன்று ஆராதிப்பதால் அவர்கட்கு மக்கட்செல்வம் உண்டாகும்.
சக்தி ஸ்வருபமாகிய நம் மங்களேஸ்வரியை ஆடிப்பூரத்தன்று ஆராதிப்பது சகல் சௌபாக்கியங்களையும் தரும். இவ்வருடமும் பாலாமடையில் வழக்கம்போல் ஆடிப்பண்டிகை அன்னையின் அருளால் சிறப்பாய் கொண்டாடப்படும். ஆடிப்பண்டிகை என்பது நமது கலாசாரத்தின் ஒரு சிறப்பு.
பெரியாழ்வாரால் நந்தவனத்தில் துளசிச் செடி அருகில் இந்நாளில் ஆண்டாள் கண்டெடுக்கப்பட்டதால் இது அனைத்து வைணவ தலங்களிலும் ஒரு பெரிய விழாவாக உற்சவமாகவும், அதை தொடர்ந்து ஆண்டாள் கல்யாண உற்சவமும் கொண்டாடப்படுகிறது.

இந்த வருடம் ஆடிப்பெருக்கும் ஆடிப்பூரமும் ஒன்றாக வருவதால்
நாட்டின் நீர் வளம் பெருகும் திண்ணாமாய்
இந்த வருடம்  ஆடி மாதம் 18ம் தேதி (ஆகஸ்ட் 3ம் தேதி) சனிக்கிழமை வருவதால் இது வார விடுமுறை நாளாகவும் இருப்பதால் அனைவரும் பாலாமடை வந்திருந்து பெருந்திறளாக கலந்து கொண்டு ஸ்ரீ மங்களாங்குரேஸ்வரர் உடன் உறையும் அன்னை ஸ்ரீ மங்களேஸ்வரியின் அருளுக்கு பாத்திரராகும் படி பிரார்திக்கிறோம்.
பாலாமடை வருவதற்கு உங்கள் பிரயாண ஏற்பாட்டை செய்து கொள்ளுங்கள். அன்னை ஸ்ரீ மங்களேஸ்வரிக்கு சாற்றுவதற்கு வளையல், ரவிக்கை துணிகள், வரும் சுஹாசினிகளுக்கு, கன்னிப் பெண்களுக்கு, சிறிய பெண் குழந்தைகளுக்கு ஏதுவாக வாங்கி பாலாமடையில் அன்னைக்கு சாற்றியபின் வழங்குவது பாலாமடையில் வழக்கத்தில் உள்ளது. ஆகையால் அவரவர் இஷ்டப்படி கொண்டு வரவும். என்ன கொண்டு வர உத்தேசித்துள்ளிர், எவ்வளவு பேர் வருகை தர உள்ளிர்கள் என்பதை சிவமிகு ராஜாமணிபட்டர், திரு ரமணா, மற்றும் எனக்கும் தெரிவித்தால் திட்டமிட வசதியாக இருக்கும்.
பாலாமடை கிராம பொது ஜனங்கள்

PALAMADAI MANGALESWARI SAMEDA MANGALANKURESHWARAR TEMPLE BELL


அருள்மிகு மங்களேஸ்வரி சமேத மங்களாங்குரேஸ்வரர் திருக்கோயில் பாலாமடை
தலைவாயில் மணி

ஆகமார்த்தம் து தேவானாம் கமனார்த்தம் து ரக்ஷாஸாம்
குர்வே கண்டாரவம் தத்ர தேவதாஹ்வான லக்ஷணம்
பொருள்:-
நான் இந்த மணியை அடிப்பது என்னுள் புனிதமான இறைசக்தியால் என் உடல், மனம், ஆன்மா நிரம்பட்டும். அசுரசக்திகளும் துர்சக்திகளும் என்னுள் இருந்தும் இல்லாமலும் உள்ளவை நீங்கட்டும்.

நமது கோயில் சிவாச்சாரியார் சிவமிகு ராஜாமணிபட்டர் மற்றும் நம் பாலாமடை கிராம வாசிகளின் நெடுநாளைய பிரார்த்தனையால் நமது அருள்மிகு மங்களேஸ்வரி சமேத மங்களாங்குரேஸ்வரர் திருக்கோயில் பாலாமடையில் வாயில் மணி அமைக்கப்பட்டுள்ளது. கோயில் வருஷாபிஷேகத்தை ஒட்டி வருகிற மே மாதம் 29ம் தேதி இக்கோயில் வாயில் மணிக்கு பூஜைகள் செய்து அன்றிலிருந்து ஒலிக்க இருக்கிறது. ஆகையால் மேற்படி வைபவத்தில் எல்லோரும் கலந்து கொண்டு இறையருளிற்கு பாத்திரர்களாகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
இப்படிக்கு
பாலாமடை கிராமவாசிகள்

கோயில் மணியானது பெரிய ஓசை எழுப்பினும் அது மனதிற்கும் ஆன்மாவிற்கும் ஒரு இதத்தை வழங்குகிறது. மனது இயற்கையாகவே ஒரு நிலைப்படுகிறது, சமனப்படுகிறது. ஆம் அலை அலையாய் வரும் விசாரங்களும் துஷ்ட எண்ணங்களும் நீங்கி சமனப்படுகிறது.
மணியோசை இறைவனை தொழுவதற்கு நம்மை தயார்படுத்துகிறது. நாம் கோயிலுக்கு செல்லாவிட்டாலும் ஆஹா நம் கோயிலில் உஷஸ்கால பூஜை நடக்கிறது, உச்சிகால பூஜை நடக்கிறது, அர்த்தஜாம பூஜை நடக்கிறது. தினமும் நடக்கும் அபிஷேகம் நடக்கிறது, பிரதோஷகால பூஜை நடக்கிறது தீபாராதனை நடக்கிறது என்று நமக்கு தெரிவிப்பதால் கோயிலுக்கு வந்தாலும் வரவில்லை என்றாலும் அந்த நேரத்தில் இறை சிந்தனையை தூண்டுவதற்கே கோயிலில் மணியை அசைத்து பிரணவ ஒலியை எழுப்புகிறார்கள்.
நமது முன்னோர்கள் பெரிய பெரிய மணிகளை பல உலோகங்களின் கலவையினால் செய்து ஓங்காரம் பிரணவத்தின் நாதத்தை அம்மணியின் நாதத்தின் மூலமாக எழுப்பி நம் உடலில் உள்ள ஏழு சக்கிரங்களை தூண்டிவிட்டார்கள்.
ஓம் (அகார, உகார, மகார) என்னும் பிரணவ ஒலி வேத மந்திரத்தின் ஆதாரம். ஆகையால் தான் யஜூர்வேத மந்திரத்தின் நடு மத்தியத்தில் ஓம் உள்ளது. கோயில் மணியின் சப்தம் தீய சக்திகளை விரட்டி எங்கும் நல்ல சக்திகளை நிரம்பச்செய்கிறது. அந்த ஓசை செல்லும் வழியெல்லாம் நல்ல சக்திகளைகொண்டு சென்று நிரப்புகிறது.
ஆகம சாஸ்திரப்படி கோயில் மணியானது 5 உலோக கலவையினால் செய்யப்படுகிறது. அவை முறையே செப்பு, வெள்ளி, தங்கம், பித்தளை (முக்கியமான மணிக்குண்டான உலோகம்) மற்றும் இரும்பு. இந்த உலோகங்கள் பஞ்ஜ பூதங்களை குறிப்பதாகும். இந்த உலோகக் கலவையில் உள்ள உலோகங்களில் கூட்டுவதும் குறைப்பதும் இதன் நாத்தில் மாறுபாட்டை உண்டாக்கும். கோயில் மணியின் த்வனியானது நமது உடலை தூய்மைபடுத்துவதுடன் கெட்ட சக்திகளையும் கிருமிகளையும் அழிக்கிறது.
இத்தகு மணி பாலாமடை கிராம வாசிகள் நமது அருள்மிகு மங்களேஸ்வரி சமேத மங்களாங்குரேஸ்வரர் கோயிலில் அமைத்துள்ளார்கள். இது அமைக்கப்பட்ட தூண்களின் உயரம் சுமார் 21 அடி மணியின் எடை சுமார் 152 கிலோ.