Sunday 9 April 2017

நமஸ்காரம்

எல்லோருக்கும் எங்கள் புது வருட ஹேமலம்ப வருஷ நல் வாழ்த்துக்கள்.

வருடா வருடம் நம் நீலகண்ட தீக்ஷிதரின் அதிஷ்டானத்தில் அவருடைய ஜயந்தி மஹோத்ஸவமம் மற்றும் அவருடைய ஆராதனை மஹோத்ஸவத்தையும் முன்னிட்டு  வெகு சிறப்பாக ருத்ர ஏகாதசினி, வஸோர்தாரா ஹோமம் முதலியன உங்கள் எல்லோரின் அதரவினால் வெகு சிறப்பாக நடந்து வருகிறது.

நம் தீக்ஷிதரின் சந்ததிகளும், பாலாமடை கிராமத்து பொது ஜனங்களும் இதில் பெரும் அளவில் கலந்து கொள்கிறார்கள். நம் பாலாமடை கிராமத்தில் அநேகமாக எல்லாவீடுகளும் பராமரிப்பற்று இருந்த நிலை கடந்த காலம் ஆகி இப்பொழுது சிறப்பாக பராமரிக்கப்படுகின்றன. பாழடைந்த வீடுகள் இடிக்கப்பட்டு புதிய வீடுகள் கட்டப்படுகின்றன.

நம் தீக்ஷிதரின் ஜயந்தி, ஆராதனையில்  ருத்ர ஏகாதசினி, வஸோர்தாரா ஹோமம் முதலியவற்றிற்கு எஜமானனாக நம் கிராமத்தை சேர்ந்தவர்கள் அல்லது தீக்ஷிதரின் சந்ததியைச் சேர்ந்தவர்கள் தம்பதி ஸகிதம் அமர்ந்து ஜயந்திக்கு ஒரு நாளும் மற்றும் ஆராதனைக்கு நான்கு நாட்களும் இருந்து பங்கேற்று நடத்தி வரும் நம் பாரம்பர்யத்தில் அடுத்து உள்ள இளைய சந்ததிகளும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும் என்கிற அவா எல்லோர் மனதிலும் இருக்கிறது.

ஆகையால் இதுவரை இப்படி மேற்படி வைபவங்களில்  பங்கேற்காதவர்களும் மற்றும் இளைய சந்ததிகளும் (கிரஹஸ்தர்கள்) முன்கூட்டியே தங்கள் அவாவை தெரியப்படுத்தினால் அவர்களை எஜமானனாக அமரச்செய்து மேற்படி வைபவங்களை மேலும் பல புதியவர்களும் பங்கு கொண்டு நடத்த வாய்பாக அமையும்.

நம் நீலகண்ட தீக்ஷிதர் அதிஷ்டானம், தியான மண்டபம் முதலியவற்றின் பராமரிப்பு, சிவாச்சாரியார் சம்பளம், தினம் நைவேத்யம், தீபம், பூஜா த்ரவியங்கள் இவைகளுக்கு ஆகும் செலவுகள் அதிகமாகி வருகிறது. நம் அறக்கட்டளையின் வைப்பு நிதியிலிருந்து வரும் வட்டியைக்கொண்டு இச்செலவுகளை சமாளிக்க இயலவில்லை. நம் அறக்கட்டளைக்கு அளிக்கப்படும் நன்கொடைகளுக்கு வருமானவரி விலக்கு உள்ளதால்(80G Exemption from Income Tax Department) இந்த மன்மத வருஷ புது வருட நன்னாளில் குறைந்தது தங்கள் நன்கொடைகளை Mahakavi Sri Neelakanta Deekshitar Foundation பெயரில் செக், டிமாண்ட்ராப்டாகவோ அனுப்பி உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நம்முடைய வைப்பு நிதியை அதிகரிக்கச் செய்ய கடந்த நான்கு வருடதில் நம் மஹாகவி நீலகண்ட தீக்ஷிதர் அறக்கட்டளையி ட்ரஸ்ட் உறுப்பினர்கள் அனைவரும் எடுத்த தீவிர முயற்சியின் காரணமாக நம் வைப்பு நிதி சுமார் ஆறரை லக்ஷ்த்திலிருந்து (6 1/2 lacs) பன்னிரண்டு லக்ஷத்தை அடைந்துள்ளது   (14 lacs). நம் வைப்பு நிதியை மிக விரைவில் ரூபாய் இருபது லக்ஷம் (20 lacs) ஆக்க சங்கல்பித்துள்ளோம். நம் அனைவரின் இந்த சங்கல்பமும்  நிறைவேற நாம் எல்லோரும் முயன்றால் கட்டாயம் ஈடேறும்.

இதற்கு ஒரு சிறந்த வழி நம் பாலாமடை பொது ஜனங்களும் மற்றும் மஹாகவி நீலகண்டதீக்ஷிதரின் சந்ததிகளும் ஒரு குடும்பத்திற்கு குறைந்தது ஐந்தாயிரம் (அ) பத்தாயிரம் (அ) இருபதாயிரம் அல்லது அதற்கு மேலான நிதியை நன்கொடையாக அளித்து மேற்படி வைபவங்கள் மேலும் மேலும் சிறப்பாக நடக்க உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நீங்கள் அளிக்கும் நன்கொடைக்கு வருமானவரி விலக்கிற்கான சான்றுடன்கூடிய ரசீதும் மஹாகவி ஸ்ரீ நீலகண்டதீக்ஷிதரின் அதிஷ்டானத்தில் தங்கள் பெயரில் அர்ச்ச்னை செய்யப்பட்ட ப்ரசாதத்துடன் உங்கள் முகவரிக்கு அனுப்பிவைக்கப்படும்.

நமஸ்காரம்

P Kசேஷாத்ரிநாதன்   P G கணேசன் 
Secretary            Treasurer
The Donations may be sent directly from Indian Bank Accounts to "Mahakavi Sri Nilakanta Dikshithar Foundation,State Bank Of India, Santhome Branch, Savings Account No: 10013241620, IFS Code:SBIN0005797.
P K Seshadrinathan, 'Saravanabhava', 9 Second Cross Street, R A Puram, Chennai 600 028.  
P G Ganesan, Sri Gopala Gruham, Plot No.22, No.2, First Street, A Gs Colony, Puzhuthivakkam, Chennai 600 091.


1 comment:

  1. 1. இன்று மழை வெள்ளத்தால் தங்கும் வசதியில்லாத சென்னை வாழ் சகோதர, சகோதரிகள், சத்யம் சினிமா தியேட்டர் (ராயபேட்டை) இரவு முழுக்க திற‌ந்திருக்கும். இன்றிரவு தங்குவதற்கு உபயோகித்துக்கொள்ளுங்கள். தயவு செய்து இதனை உடனடியாக ஷேர் செய்யவும் அதிகமதிகம் ஷேர் செய்யுங்கள்.

    SATHYAM CINEMAS (ROYEPETTAH) will be opened for everyone tonight for stay,do get in touch .

    2. ஜிஎஸ்டி சாலையில் சிக்கிக்கொண்டிருப்போருக்கு எஸ் ஆர் எம் பல்கலைக்கழகத்தில் தங்கிக்கொள்ள அந்த நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. உணவும் வழங்கப்படுகிறது. உதவி தேவைப்படுவோர் இந்தத் தொலைபேசிக்குத் தொடர்புகொள்க: திரு ஜொகானி 9840042152.
    இதனை உடனடியாக ஷேர் செய்யவும் அதிகமதிகம் ஷேர் செய்யுங்கள்.
    SRM University is accommodating ppl in their buildings Whoever standed in GST pls go there
    For Food
    Contact Mr.Jogani 9840042152

    3. மழையில் பாதிக்கப்பட்டு கைக்கழந்தைகளுடன் அவதிப்படுபவர்கள் (ஏற்கனவே இங்கு சிலர் இருப்பதால்) 10 முதல் 15 நபர்கள் மேலும் தங்கலாம்.
    இடம் டி.யூ.ஜே தலைமை அலுவலகம், 12,குமரன் காலனி மெயின் ரோடு, வடபழனி, சென்னை.
    மேலும் தகவல் அறிய 044 23621494.

    டி.எஸ்.ஆர்.சுபாஷ்.

    4. மிக அவசரம்.
    சென்னை மாநகரத்தின் தற்போதைய நிலை மிகவும் அச்சுறுத்துகிறது.
    யார் காரணம்? எதனால் இப்படி ஆனது? யார் பொறுப்பு? என்ற எல்லா கேள்விகளையும் தற்போதைக்கு தவிர்த்து விடுவோம். பேரிடருக்கும், பெரும் நாசத்துக்கும் இந்த அரசியல் உதவாது.
    அரசை குறை சொல்வதை தவிர்த்து, அவரவரால் முடிந்த சிறிய உதவிகளை, பிறருக்கு செய்வோம். இது உயிர் பிரச்சனை.
    பாலவாக்கத்துக்கு அருகில் இருப்பவர்களுக்கு உணவு, இருப்பிடம், மருத்துவ உதவி தேவையெனில் எனது தங்கை Dr. Latha & அவர் கணவர் Dr. Sai kishore ஐ தொடர்பு கொள்ளலாம்.
    தொடர்பு எண்கள் : 9840017184 , 04424490073
    இரவு, பகல் எந்நேரமும் உதவிடக் காத்திருக்கின்றனர். நண்பர்கள் இந்தச் செய்தியை பகிர்ந்து கொள்ள
    வேண்டுகிறேன்.

    5. உணவின்றி வாடுபவர்கள் தொடர்பு கொள்க: 5000 உணவு பொட்டலங்கள் தயார் நிலையில் உள்ளது.
    தொடர்புக்கு: vineet Jain 9840426263 , Gaurav Jain 9841062626 000 (சென்னை)

    food pkts are ready for distribution

    Pls contact
    vineet Jain 9840426263
    Gaurav Jain 9841062626

    6. Indian Navy - 10 of their expert divers & rescue personnel with boats at Gandhi Nagar, Adyar.Contact 04425394240 Navy helpline

    அடையார்-காந்தி நகர் பகுதியில் வெள்ளம் அபாயத்தில் சிக்கிக்கொண்டவர்கள் 04425394240 என்ற கடற்படை உதவி எண்ணில் உதவிக்கு அழைக்கவும்.

    7. 75 முதல் 100 பேர் தூங்கும் இடமும் 1000 பேருக்கு உணவும் தயாராக உள்ளது நுங்கம்பாக்கத்தில் Call 7092020207

    8. மின் கம்பிகள் அறுந்து விழந்தால்.இந்த எண்ணை தொடர்பு கொள்ளவும்:1077

    9. பாரிஸ் கார்னர் பகுதியில் 10 பேர் தங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. தொடர்புக்கு 8939141233

    10. மிதக்கும் படகு உதவி தேவையெனில் அழைக்கவும்..
    இராயபுரம் 9445190005
    திருவிக நகர் 9445190006
    அம்பத்தூர் 9445190007
    அண்ணா நகர் 9445190008

    #இந்த பதிவுகளுக்கு தயவு செய்து லைக்குகள் தேவையில்லை. அதிகமாக ஷேர் செய்யுங்கள். யாருக்கு தெரியும், நீங்கள் செய்யும் ஏதேனும் ஒரு ஷேரினால் கூட, யாரவது ஒருவராவது கூட பயன் பெற இயலும் தோழர்களே. அதிகம் ஷேர் செய்யுங்கள்.

    இங்க ஷேர் பண்ணுறதால மக்களுக்கு எந்த பயனும் இல்லை எனும் எண்ணம் வேண்டாம் டிவிட்டர்,பேஸ்புக் முலமா பலர் மீட்க்கபடுறாங்க

    ReplyDelete